இயேசு என் குரு
யார் குரு? என் வலிமையை பார்த்து மெச்சிக்கொள்ளுகிறவரா, என் வலியை உணர்ந்து கை பற்றிக்கொள்கிறவரா? என் பந்திக்கு முந்துகிறவரா? என் பந்தியை விசாரிக்கிறவரா? கர்வம் கொண்டு எதிர்க்கிறவரா? கர்வம் உடையவரை எதிர்க்கிறவரா? பதில் சொல்கிறவரா? என்னோடு பேசுகிறவரா? அவரை போல வாழ வேண்டும் என்று தூண்டுகிறவரா? அவரை போல வாழ என்ன செய்ய வெண்டும் என்று அவரையே சுற்றி சுற்றி வர செய்பவரா? எனக்கு சவால் வைப்பவரா? தனக்கு சவால் வைத்துக்கொள்கிறவரா? என்னை நம்ப வைப்பவரா? என்னை உணர வைப்பவரா? விலாவில் இருந்து சொட்டிய நீரும் தண்ணீரும் துடிதுடித்துக்கொண்டே வந்தது, இயேசுவிடம் சொன்னது, மகிமையில் இருந்து மண்ணுக்கு நீர் வந்தீர், அது சரி. நான் ஏன் இந்த மகிமையை விட்டு பிரிந்து மண்ணுக்குள் இறங்க வேண்டும்? உம்மை விட்டு பிரிவதை விட, இறந்தாலும் உமக்குள்ளே இருக்க விரும்பினேனே இயேசுவே! இந்த பூமியில் இதுவரை எந்த இரத்தமும் அடையாத கொதி நிலையோடு பாய்ந்து வந்த அந்த இரத்தம் நிச்சயம் பல கற்களை உருக்கியிருந்தது! இயேசுவே என் குரு! எனக்காய் குருதி சிந்திய இயேசுவே என் குரு!